முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 17 இலட்சத்தக்கும் அதிகமான சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து 29 ஆயிரத்து அதிகமான அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு!

Saturday, August 28th, 2021

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 17 இலட்சத்து 10 ஆயிரத்து 146 சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து 29 ஆயிரத்து 403 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றி உள்ளதாக தனியார் நிறுவனம் ஒன்றின் முகாமையாளரும் ஓய்வுபெற்ற கப்டனுமான பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்களை தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் –  இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி கற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடி கற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2021 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் 17 இலட்சத்து 10 ஆயிரத்து 146 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 29 ஆயிரத்து 403 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றி உள்ளது

அத்துடன் தொடர்ந்தும் குறித்த நிறுவனம் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: