முல்லைத்தீவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!
Tuesday, July 6th, 2021கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் பணி நேற்று ஆரம்பமானது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலையில் இந்தப் பணி தொடங்கியது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற முடியும் என்று கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக புதுக்குடியிருப்பு, வெலிஓயா பகுதிகளில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நேற்று தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் இரண்டாம் திகதி இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உரியநேரத்தில் தேர்தலை நடத்தாமையானது ஜனநாயக மறுப்பாகும் - தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு
பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வேலைத்திட்டம்- விசேட வர்த்தமானி நாளை வெளியீடு!
உக்ரைன் யுத்தம் - நாடு திரும்ப விரும்பாத இலங்கையர்கள் !
|
|