மும்மொழியிலும் அவசியம்: வர்த்தமானி வெளியானது!

Sunday, January 5th, 2020



அனைத்து பொருட்களின் பொதிகளிலும் சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் பொறிக்கப்பட்ட வர்ணகுறி அச்சிடப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

நுகர்வோர் விவகார ஆணைக்குழுவின் ஊடாக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலை,தயாரிப்பு எண்,காலாவதி திகதி,தயாரிப்பு திகதி,நிறை அல்லது அளவு, இறக்குமதி செய்யப்பட்ட நாடு அல்லது உற்பத்தி செய்யப்பட்ட நாடு என்பன பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீண்டும் பொதி செய்யப்படும் திகதி அல்லது மொத்தமாக பொதி செய்யப்பட்ட பொருட்கள் மீண்டும் தொகுக்கப்படும் திகதி குறிப்பிட வேண்டுமெனவும் நுகர்வோர் விவகார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.

Related posts: