முப்படையினர் இந்தியாவுக்குப் பயணம்!
Sunday, June 24th, 2018இராணுவ உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த ஒரு தரப்பினரும் அவர்களின் குடும்பத்தினரும் மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
இந்திய இராணுவ பேச்சாளர் அமன் ஆனந்தை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இலங்கையின் 160 பேர் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
இன்று முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ள பயணத்தில், அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி மற்றும் புத்த கயா முதலான இடங்களை அவர்கள் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பருத்தித்துறை சாலைக்கு 4 புதிய இ.போ.ச பஸ்கள்!
இலங்கைக்கு மலேசிய விடுத்துள்ள அறிவிப்பு!
பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை முழுத் திறனுடன் மீண்டும் ஆரம்பிக்க எந்தத் தீர்மானம் எட்டப்படவி...
|
|