முப்படைகளின் தளபதி பயணம் மேற்கொண்ட உலங்குவாநூர்தி விபத்து – 7பேர் உயிரிழப்பு!

Wednesday, December 8th, 2021

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இராணுவ உலங்குவாநூர்தி ஒன்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியதில், 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இராணுவ உலங்குவாநூர்தியில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணம் மேற்கொண்டதாக இந்திய விமான படை தெரிவித்துள்ளது.

வெலிங்டனில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக 10 க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள், இந்த உலங்குவாநூர்தியில் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக விமானப்படை ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தின் குன்னூர் அருகே சி.டி.எஸ் ஜெனரல் பிபின் ராவத் பயணித்த ஐ.ஏ.எப் எம்-17வி5 ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts: