முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு பூஸ்ரர் தடுப்பூசியேற்ற உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்!

Tuesday, October 5th, 2021

​கொரோனா தொற்று ஒழிப்பிற்கான பூஸ்ரர் தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தனது பரிந்துரையை வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு ஊக்கி தடுப்பூசியை ஏற்ற, உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அதற்கமைய, ஊக்கி தடுப்பூசியை ஏற்றுவதற்கு தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: