முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த இடையேயான சந்திப்பு நிறைவு!

பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அலரி மாளிகையில் இன்றையதினம் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல், முற்பகல் 10.15 இற்கு ஆரம்பிக்கப்பட்ட மதியம் 12.45 இற்கு நிறைவடைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தற்போதைய நிலவரம் தொடர்பில் கந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கொரோனாவை இல்லாதொழிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைதிட்டங்கள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா ஒழிப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிதி தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட விளக்கம் ஒன்றை அளித்துள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|