முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியின் முன்பிணை மனு நிராகரிப்பு!
Friday, September 16th, 2016
தனக்கு முன்பிணை வழங்குமாறு, கொழும்புக்கான முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரக்கோன் சமர்ப்பித்த மனுவினை கொழும்பு மேலதிக நீதவான் துலினி அமரசிங்க நேற்று வியாழக்கிழமை நிராகரித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட ரக்பி வீரர் வசிம் தாஜுத்தீனின் உடற்பாகங்கள் காணாமற்போன விவகாரம் தொடர்பில், தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், முன்பிணை வழங்குமாறு கொழும்புக்கான முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரக்கோன் மேற்படி மேற்படி மனுவினை சமர்ப்பித்திருந்தார்.எவ்வாறாயினும், அவரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

Related posts:
கண்காணிக்கப்படும் பேஸ்புக் கணக்குகள் !
2020 இல் மேலும் பல வரிகள் அறிமுகம்!
2027 இல் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை மாறும் – அரசாங்கம் நம்பிக்கை!
|
|
|


