முதலாம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை!

Thursday, July 28th, 2022

எதிர்வரும் முதலாம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது காணப்படும் போக்குவரத்து சிக்கல் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அனைத்து பாடசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பாடசாலை ஆரம்பமாகும் நேரம் மற்றும் நிறைவடையும் நேரம் என்பனவற்றை கவனத்திற்கொண்டு இந்த புதிய பேருந்து சேவை முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மக்கள் அசண்டையீனம் - மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச...
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் – நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளி...
நிலவும் சீரற்ற வானிலை - 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ள...