சிறுபோகத்தில் சேதனப் பசளையை பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபடும் சாத்தியம் அதிகம் – பணிப்பாளர் ரொஷான் ஜயசூரிய மேலதிக தெரிவிப்பு!

Sunday, May 9th, 2021

சேதனப் பசளையைப் பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபடும் சாத்தியம் சிறுபோகத்திலும் காணப்படுவதாக தெரிவித்துள்ள உர செயலகத்தின் பணிப்பாளர் ரொஷான் ஜயசூரிய மேலதிக பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்கும் சேதனப்பசளை கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் சேதனப் பசளை உற்பத்தியாளர்களின் உற்பத்திக் கொள்ளவு அதிகரிக்கப்படும். அதேநேரம் சிறுபோகத்திற்கு தேவையான இரசாயனப் பசளை ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வருடாந்தம் இரசாயனப் பசளையை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கம் 4 பில்லியன் ரூபாவை செலவிடுகின்றது.

இரசாயன பசளை இறக்குமதியை தடை செய்துள்ள போதிலும் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள பசளையை விற்பனை செய்வதற்கு எந்தத் தடங்கலும் இல்லையென உர செயலகம் அறிவித்துள்ளது.

அதேவேளை எதிர்வரும் பெரும்போகத்திற்குத் தேவையான சேதனப் பசளை உற்பத்திக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எந்தவகையான பயிரினத்திற்கும் பயன்படுத்தக்கூடிய சேதனப் பசளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உயிரியல் உற்பத்தி பசுமை தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தொற்றா நோய்கள் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இரசாயன பசளையின் தாக்கம் பிரதான பங்கு வகிப்பதாக இனங்காணப்பட்டுள்துடன் அதனால், இலங்கை விரைவில் சேதனப் பசளையைப் பயன்படுத்த முன்வர வேண்டுமெனவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: