முடிகிறது பொதுமன்னிப்பு காலம் – இராணுவப் பேச்சாளர்!
Saturday, July 9th, 2016தப்பிச் சென்ற முப்படையினர் மீண்டும் சேவையில் இணைந்து கொள்ள வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் முடிவடைவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
11 ஆயிரத்து 847 இராணுவத்தினர், 679 கடற்படையினர், 525 விமானப்படையினர் சேவையை கைவிட்டு தப்பிச் சென்று சுதந்திரமாக நடமாடி திரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர், இவர்கள் சேவையாற்றிய படைப் பிரிவுகளுக்கு சென்று இணைந்து கொள்ளுமாறு படைகளில் இருந்து தப்பிச் சென்றவர்களி்டம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மீண்டும் சேவைக்கு திரும்பாதவர்களை கைது செய்வதற்காக எதிர்வரும் 13ஆம் திகதியில் இருந்து விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
கொரோனா அச்சம்: மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆலோசனை!
கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விநியோகிக்க இறக்குமதியாளர்கள் இணக்கம் - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க ...
இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு - இருநாட்டு உறவு குறித்து விரிவான...
|
|