முடக்கல் நிலை நீக்கப்பட்டாலும் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியமாகும் – யாழ் மாவட்ட கோரோனா ஒழிப்பு செயலணி வலியுறுத்து!

Wednesday, November 11th, 2020

முடக்கல் நிலை நீக்கப்பட்டாலும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியமாகும் என யாழ் மாவட்ட கோரோனா ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டிருந்த மூன்று கிராமங்கள் இன்று காலையிலிருந்து முடக்கல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும் குறித்த பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியினை கடைப்பிடித்து தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியமாகும் என்றும்செயலணி வலியுறுத்தியுள்ளது.

மேல் மாகாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் கொரோனா தொற்று வலுவடைந்து வரும் நிலை காணப்படுகின்றது. அந்த நிலையில் தற்பொழுது யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக சுகாதாரப் பிரிவினரால் முடக்கப்பட்ட பிரதேசங்கள் முடக்க நிலைலிருந்து விடுவிக்கப்பட்டாலும் கிருமி தொற்று அச்சம் தொடர்ந்து காணப்படுகின்றது.

எனவே அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றுவதன் மூலமே அப்பகுதியிலோ அல்லது வேறு பகுதிகளில் குறித்த தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க முடியும். அத்துடன் முடக்க நிலையிலிருந்து விடுபட்ட கிராமங்களுக்கு மேல் மாகாணம் அல்லது ஏற்கனவே கொரோனா பாதிப்புள்ள அபாய வலயங்களிலிருந்து புதியவர்கள் யாரும் வந்தால் அவர்கள் கட்டாயமாக சுகாதாரப் பிரிவினரிடம் பதிவுகளை மேற் கொள்ள வேண்டும் எனவும் குறித்த செயலணி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் கைது செய்ய முற்பட்டதா? - திறந்த நீதிமன்றில் ஓடிவந்து பெண் முறைப...
அரசியல் சித்தாந்தம் எதுவாக இருப்பினும் சுனில் பெரேரா ஒரு சிரேஷ்ட கலைஞராக இலங்கை மக்களின் இதயங்களில் ...
குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இருந்து சில அதிகாரிகள் திட்டங்களைச் செயற்படுத்துவதால் அபிவிருத்தி நடவடி...