முகமாலையில் சீருடைகள் எலும்புத் துண்டுகள் மீட்பு – பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பு!
Thursday, September 17th, 2020
பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட போதே இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் உடனடியாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் சந்தேகத்திற்குரிய பொருட்களை பார்வையிட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதனையடுத்து பளை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சீனாவிடம் முதலீட்டை கோரியுள்ளோம் - அமைச்சர் நிமால்
மீண்டும் நடைமுறைக்கு வருகிறது எரிபொருள் விலைச்சூத்திரம்!
இலங்கை – கொரியா இடையே தொழில்சார் ஒத்துழைப்பு - அமைச்சர் சுசில் - இலங்கைக்கான கொரிய தூதுவர் திருமதி ம...
|
|
|


