மீன்பிடித் துறை அபிவிருத்திக்கு தொழில்நுட்ப உதவி!
Saturday, March 17th, 2018
இலங்கையிடம் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு சீசேல்ஸ் கோரியுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சர் திலிப் வெதஆராச்சியை இலங்கைக்கான சீசேல்ஸ் தூதுவர் கொண்ராட் மெடிறிக் அண்மையில் சந்தித்துள்ளார்.
சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடி என்பன தமது நாட்டுக்கு வருமானம் வரும் முக்கிய துறைகள் என்றும் மீன்பிடித்துறை அபிவிருத்திக்காக குளிரூட்டல் தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும் சீஷேல்ஸ் தூதுவர் கோரியுள்ளார்.
இந்த நிலையில் சீஷேல்ஸுக்கு குறித்த உதவிகளை இலங்கை வழங்குதாக மீன்பிடித்துறை அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.
Related posts:
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அதிபரின் முறைகேடு: மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை
எம்.ஜி.ஆர், முத்தையா முரளிதரன் போன்றோரை தந்தது இந்த மண்ணே!
நாவற்குழியில் இராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை!
|
|
|


