மீன்பிடித்துறையில் முன்னேற்றம் – அமைச்சர் மஹிந்த அமரவீர!
Sunday, September 10th, 2017இலங்கை மீன்பிடித்துறையில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை மீன்பிடி திணைக்களத்தின் 106ஆவது விற்பனைக்கூடம் அண்மையில் ராகம நகரில் திறந்து வைக்கப்பட்டபொழுது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மேலும் அமைச்சர் தெரிவிக்கையில் ,
இதற்கமைவாக மீன்பிடி உற்பத்தி செயல்பாடுகளை மேம்படுத்த மீன்பிடித்துறை அமைச்சு விசேடத் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.எதிர்காலத்தில் புதிய திட்டத்திற்கு அமைய, மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மீன் பதப்படுத்தல் உள்ளிட்ட உள்ளார்ந்த செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு தனியார் துறையினரின் உதவியும் பெற்றுக் கொள்ளப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
இலங்கை பிரித்தானியா உறவுகள் வலுவான நிலையில்!
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு?
84 கோடி ரூபா செலவில் ஹம்பாந்தோட்டையில் யானைகள் சரணாலயம்!
|
|