இன்று நாடளாவிய ரீதியில் பொலிஸாருக்கு விசேட சத்தியப்பிரமாணம்!
Saturday, September 17th, 2016
நாடளாவிய ரீதியில் பொலிஸார் இன்று (17) விசேட சத்தியப்பிரமாணம் ஒன்றை செய்து கொள்ளவுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால், பொலிஸாருக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒழுக்க விதிக் கோவையை பின்பற்றி நடப்பதாக சத்தியப்பிரமாணம் செய்யப்படவுள்ளது. இந்த ஒழுக்க விதிக் கோவை இன்று (17) காலை 9 மணியளவில் வெளியிடப்படவுள்ளது.
இதன்பிரகாரம் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் முன்னிலையில் இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்தார்.
Related posts:
பாடசாலை மாணவருக்கான உணவு சீர்கேடான இடத்தில் சமைக்கப்பட்டது - சமையலாளருக்கு 5 ஆயிரம் ரூபா தண்டம்!
சேனா படைப்புழுக்களின் தாக்கம் குறைகிறது!
4 வகையான டெங்கு வைரஸ் பிறழ்வுகள் இலங்கையில் - தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!
|
|