மீனவரின் உயிரிழப்பு தற்செயலான விபத்து – கடற்படைப் பேச்சாளர்!
Saturday, March 25th, 2017மன்னார்,விடத்தல் தீவில் மீனவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒரு விபத்து என கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் சமிந்த வலாக்குழுகே தினகரனுக்குத் தெரிவித்தார். சம்பவத்தின்போது மீனவர் தெப்பம் ஒன்றில் இருந்தபடியே மீன் பிடித்துள்ளார்.
வேகமாகச் சென்ற கடற்படையினரின் படகு இந்த தெப்பத்தில் மோதியதில் தெப்பம் கவிழ்ந்து மீனவர் கடலுக்குள் விழுந்துள்ளார். கடற்படையினர் மீனவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
விடத்தல் தீவில் மீனவரின் படகை கடற்படையினரின் படகு மோதியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்ததாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் கடற்படைப் பேச்சாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் அது தற்செயலாக இடம்பெற்ற விபத்து எனக்கூறினார்.
Related posts:
கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 306 பேருக்கு கொரோனா!
மக்கள் வெளிநாட்டுகளுக்கு செல்வது பிரச்சினைக்குரிய விடயமல்ல - வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!
ஆப்கானை புரட்டிப்போட்ட பூகம்பம்: நூற்றுக்கணக்கானோர் பலி - இடிபாடுகளுக்கு அடியிலிருந்து உடல்களை மீட்...
|
|