மீத்தொட்ட அனர்த்தம் தொடர்பில் ஜப்பான் அனுதாபம் தெரிவிப்பு!

Monday, April 17th, 2017

மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் இலங்கை வாழ் பொது மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து ஜப்பான் பிரதமர் சின்சோ அபே  (Hon. Shinzo Abe)   அவர்கள் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி இலங்கை பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு விசேட செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதுவரை உயிராபத்துக்கள் பல இடம்பெற்றுள்ளதுடன், அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், சொத்து சேதங்கள் மற்றும் இடம்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் பதிவாகியுள்ளதாகவும், இத்துரதிஷ;டவசமான சம்பவம் தொடர்பில் ஜப்பானிய பொதுமக்களும், அரசாங்கமும் தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலைமையினை, இயல்பு வாழ்க்கைக்குத் திருப்புவதற்கு தேவையான சகல விதமான உதவிகளையும் ஜப்பான் வழங்கத் தயாராகவுள்ளதாகவும் அச்செய்தியில் ஜப்பான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த அனர்த்தம் குறித்து ஆய்வு செய்வதற்கு ஜப்பானிலிருந்து தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கை வரவுள்ளதாகவும், அவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட பணிகள் தொடர்பிலும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது .

Related posts: