அமெரிக்க கடற்படையின் பெற்ற மூத்த அதிகாரி – இராணுவ தளபதி சந்திப்பு!
Wednesday, August 30th, 2017அமெரிக்க கடற்படையின் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியான அட்மிரல் வில்லியம் ஜே போலன், இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்தார்.
2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கிற்கான விஜயத்தின்போது பண்டாரநாயக சர்வதேச ஞாகபார்த்த மாநாட்டு மண்டபத்தின் விஷேட பிரமுகர்கள் அறையில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது நாட்டின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு முக்கிய விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.இலங்கை இராணுவ தளபதிக்கு கருத்தரங்கு தொடர்பாக வாழ்த்துக்களை இதன்போது அவர் தெரிவித்தார். பின்னர் இராணுவ தளபதி, கருத்தரங்கிற்கு வருகை தந்ததையிட்டு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
Related posts:
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசுக்கு எச்சரிக்கை!
பாதுகாப்பற்ற வாகனங்கள் இறக்குமதிக்கு தடை!
புத்தாண்டில் பிரதமரின் தலைமையில் பிரதமர் அலுவலக பணிகள் ஆரம்பம்!
|
|