மீண்டும் 16 இந்திய மீனவர்கள் கைது!

Tuesday, July 12th, 2016

பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்’திய மீனவர்களை இலங்கை கடற்படையினர்  நேற்று (11) கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

கைதுசெய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் நாகை மாவட்டத்தினைச் சேர்ந்தவர்களென தெரியவரவதடன். இவர்களிடமிருந்து இரண்டு மீன்பிடி படகுகள் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று அவர்களுடைய பதிவுகளை மேற்கொண்ட பின்னர்  நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீரியல் வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts:

ஊழல்வாதிக்கு அதிபர் நியமனம் வழங்கிய வடமாகாணக் கல்வியமைச்சர் - இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்!
இரண்டாயிரத்து 500 மெகாவோட்ஸிற்கும் மேலான மின்சார கோரிக்கை- அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய !
மத்திய வங்கி மோசடி விவகாரம் - மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அ...