மீண்டும் போராட்டம் – எச்சரிக்கும் பெற்றோலிய தொழிற்சங்கங்கள்!
தமக்கு அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மறு அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மூன்று பிரதான கோரிக்கைகளின் கீழ் கடந்த மாதம் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தன. இதன்போது குறித்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்வுகள் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அளித்த எழுத்துமூல வாக்குறுதியையடுத்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது.
எனினும், இன்றுவரை தீர்வுக்கான எந்தவொரு அறிகுறியும் தென்படாததால் தங்கள் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்திருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜயந்த பரெய்கம தெரிவித்துள்ளார்
Related posts:
ஈரான் நாட்டு யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்!
அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் கொரோனாவிலிருந்து 76 சதவீத பாதுகாப்பளிக்கிறது - மருத்துவ ஆராய்...
விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் விவசாய உற்பத்தி பற்...
|
|
|


