மீண்டும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, December 16th, 2021

கடந்த 12 நாட்களில் 24 ஆயிரத்து 773 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் தற்போது வரையில் 1 இலட்சத்து 29 ஆயிரத்து 762 சுற்றலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜேர்மனி, அவுஸ்ரேலியா, கசகஸ்தான், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் இருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: