மீண்டும் சர்சையில் மாட்டிய பொலிஸ்மா அதிபர்!

Tuesday, October 17th, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். இந்துக்கல்லூரியில் கலந்து கொண்ட நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்த கல்லூரி வீதியில் பலர் மத்தியில் தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப்பாதுகாவலர் மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் சுத்தம் செய்யக்கொடுத்த சம்பவம் அனைவரது மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தேசிய தமிழ்த் தினவிழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்த பொலிஸ்மா அதிபர் யாழ். இந்துக்கல்லூரியை வந்தடைந்ததும் அவரது வாகனத்தில் இருந்து இறங்கியுள்ளார்.

மழை காரணமாக அப்பகுதியில் சேறு காணப்பட்டது. வாகனத்தில் இருந்து இறங்கிய அவரது பாதணியில் சேறு பூசப்பட்டதன் காரணமாக அதனை சுத்தம் செய்ய முற்பட அவரது மெய்ப் பாதுகாவலர் துணியால் சுத்தம் செய்துள்ளார்.இதையடுத்து அவருக்கு உதவியாக கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரும் சுத்தம் செய்து கொடுத்தார். இவ்வாறு தனது இரண்டு பாதணிகளையும் கழற்றி கொடுத்து சுத்தம் செய்த பின்னரே நிகழ்வு இடத்துக்கு பொலிஸ்மா அதிபர் சென்றுள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்றவேளை அவ்விடத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறப்பு அதிரடிப் படையினர் பொதுமக்கள் மாணவர்கள் என பலரும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: