மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
Friday, August 24th, 2018நாளை முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கவுள்ளதாக வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளதாக குறித்த குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய 12.5Kg சமையல் எரிவாயுவின் விலையினை 158 ரூபாவினால் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, சமையல் எரிவாயுவின் புதிய விலையானது 1696 ரூபாவாக அறிவிக்கப்படவுள்ளது.
சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பினை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு நிறுவனங்கள் விலை அதிகரிப்பிற்கு கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் சமையல் எரிவாயுக் கொள்கலன் ஒன்று 245 ரூபாவால் அதிகரித்து கடந்த ஜூன் மாதம் 138 ரூபாவினால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
Related posts:
சாதாரணதர மாணவர்களின் நலன்கருதி ஜனவரி 25 ஆம் திகதிக்கு பின்னர் தனியார் கல்வி நிலையங்களை திறப்பது தொடர...
வடக்கு தற்போதும் ஆபத்தான நிலையிலேயே உள்ளது - மாகாண சுகாதார பணிப்பாளர்!
டெங்கு நோய் பரவல் 30 வீதத்தால் அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கடும் எச்சரிக்கை!
|
|