மின்மானி வாசிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் – பாவனையாளர்களிடம் மின்சார சபை கோரிக்கை!

Friday, October 30th, 2020

தற்போதைய சூழ்நிலையில் மின்மானி வாசிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மின்சார சபை கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துள்ள நிலையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வீடுகளில் உள்ள மின்சார அளவீட்டுப் பெட்டியின் மானி தெளிவாகத் தெரியும்படி வைத்திருக்குமாறும், பட்டியலை வழங்கவரும் மின்மானி வாசிப்பாளர்களிடத்தின் அருகில் செல்லாது மின்சார பட்டியலைப் பெற்றுக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்து மாறும் மின்சார சபையின் நுகர்வோர் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: