மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும்வரை மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க அவதானம் செலுத்துவதாக அரசாங்கம் அறிவிப்பு!

Sunday, March 27th, 2022

தடையின்றி மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் வரை உத்தேச மின்சார கட்டணத்தை அதிகரிக்காதிருப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒரு மின் அலகு உற்பத்திக்கு 40 ரூபா செலவிடப்படுகிறது. எனினும், ஒரு மின் அலகுக்கு 8 ரூபாவுக்கும் குறைவான கட்டணமே அறிவிடப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்தும் விநியோகத்தை முன்னெடுத்து செல்வதற்கு உற்பத்தி செலவினங்களுக்கு ஏற்றவகையில் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய, அமைச்சரவையினால் மின்சார சபையிடம் இருந்து மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை கோரப்பட்டிருந்தது.

இதன்படி, குறித்த யோசனை தற்போது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நீர்வழங்கல் அமைச்சுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: