மின்சார சபைக்கு 228 மில்லியன் ரூபா நஷ்டம்!

Sunday, June 18th, 2017

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை மின்சார சபைக்கு 228 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மின்சக்தி மற்றும் புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயரவர்தன இதனை தெரிவித்துள்ளார் மழையுடனான காலநிலையின் போது மாத்தறை மின்சார உபநிலையங்களுக்கு ஏற்பட்ட சேதங்களே இதற்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இதேபோன்று பல பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, மின் உபநிலையங்கள் மற்றும் மின் மாற்றிகள் என்பன சேதப்பட்டுள்ளதாகவும் சுலக்ஷன ஜயரவர்தன தெரிவித்துள்ளார்

Related posts:

கூட்டமைப்பின் உறுப்பினருக்கு எதிராக வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
யாழ்.சிறைச்சாலையில் விருந்தினர் விடுதி சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உப்புல் தெனியவினால் வைபவரீதியாக தி...
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் - எரிபொருள் வழங்க தயாராகும...