மின்சார உற்பத்திக்காக 51 பில்லியன் மேலதிக செலவு– மின்சக்தி அமைச்சு!

எதிர்வரும் 6 மாதங்களில் மின்சார உற்பத்திக்காக 51 பில்லியன் ரூபா மேலதிக செலவீனத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பித்தல் சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நீர்மின் உற்பத்தி தற்போது 8 முதல் 10 வீதத்திற்கு இடையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள பிரதான நீர்த் தேக்கங்களில் தற்போது 30 முதல் 31 வீதமான மட்டத்திலேயே நீர் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாளாந்த மின்சார தேவையின் மிகக் குறைந்தளவு மின்சாரமே நீர்மின் உற்பத்தி மூலம் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் மிக்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
Related posts:
வேலை செய்யும் மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவது அனைவருக்கும் நன்மை...
நாட்டின் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தின் ஈடுபாடு இல்லை - கருத்துச் சுதந்திரமும் தாராளமாக உள்ளது ...
நடைமுறைக்கு வரும் அதிவிசேட திட்டங்கள் - இலங்கை மத்திய வங்கி விசேட தீர்மானம்!
|
|