மின்சாரத் தடையின் பின்னணியில் சதி – ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு!
Thursday, February 6th, 2020
எரிபொருள் இருந்த நிலையில் அமைச்சின் அனுமதியின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
அதற்காக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் குழு ஒன்று நியமிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அழுத்கமகே தெரிவித்துள்ளார்.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கேரவலபிட்டிய வெஸ்ட்கோஸ்ட் ஆலையில் 1500 டன் எரிபொருள் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இது வேண்டும் என்றே செய்த சூழ்ச்சியா என ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 3ஆம் திகதி நாட்டின் பல பிரதேசங்களில் மின்சார தடை ஏற்பட்டது. இது சட்டவிராதமான செயல் என அறிவிக்கப்பட்டது.
Related posts:
இரண்டு கட்டங்களாக இடம்பெற உள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்!
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவி...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு - கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட நிற...
|
|
|


