மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நெருக்கடியொன்றை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.

Tuesday, February 20th, 2018

எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணத்தை மார்ச் மாதமளவில் அதிகரிக்க வேண்டிய நெருக்கடியொன்றை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்க வேண்டிய அடுத்த கட்ட கடன் தொகையை விடுவிப்பதாயின் இலங்கையில் எரிபொருள்மற்றும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சர்வதேச சந்தையின் விலைக்கேற்ப எரிபொருள் விலையேற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சூத்திரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும்சர்வதேச நாணய நிதியம் சிபார்சு செய்துள்ளது.

அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளாது விடின் சர்வதேச நாணய நிதியத்திடம்இருந்து கிடைக்கப் பெறவுள்ள 165 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி இலங்கைக்கு கிடைக்காமல் போகலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: