மிக அவசர தேவையை தவிர ஏனையவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் – ஜனாதிபதி!

மிக அவசர தேவையை தவிர ஏனையவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன் ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையாக சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொருட்கள் விநியோகத்தின் போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அனைத்து தரப்பின் ஆதரவு அவசியம்.
அத்துடன் அவதானமிக்க பகுதிகளில் திருமண நிகழ்வு மற்றும் மத வழிப்பாடு உட்பட மக்கள் ஒன்று கூடுவதனை தவிர்க்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் ஆண்டொன்றுக்கு 48 ஆயிரம் இயற்கை கருச்சிதைவு!
புதிய இலங்கையின் புதிய வரைப்படம் இன்று!
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவையின் செயலாளர்களுடன் தீவிர ...
|
|