மாலி நாட்டிற்கு இலங்கை இராணுவக் குழு பயணம்!

Friday, January 12th, 2018

மாலி நாட்டின் ஐ.நாவின் பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்காக இலங்கை இராணுவத்தின் 18 உறுப்பினர்களைக் கொண்ட மற்றோர் குழுபுறப்பட்டு சென்றுள்ளது.

குறித்த பணிக்காக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் முதற்குழுவினர் புறப்பட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

ஒருவருட கால சேவைக்காக 10 படை பிரிவுகளைச்சேர்ந்த 200 இராணுவ வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் மிகவிரைவில்இலங்கையிலிருந்து மாலி நாட்டின் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிக்காக பயணிக்க உள்ளனர்.

Related posts: