மார்ச் 31க்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் – அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை !
Sunday, February 5th, 2023எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கடன் உத்தரவாததிற்காக தற்போது சீனாவுடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியா ஏற்கனவே கடன் உத்தரவாதங்களை வழங்கியுள்ளதாகவும், மீதமுள்ள கடனாளர்களுடன் பேச்சுவார்த்தை விரைவில் நிறைவுபெறும் என்றும் கூறியுள்ளார்.
மோசமான கொள்கைகள் காரணமாக இலங்கை தற்போதைய இக்கட்டான நிலையில் இருப்பதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.
இருப்பினும் அரசாங்கம் மக்களின் இன்னல்களைப் போக்க பாடுபடுகிறது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தாலும் அவர்களுக்கு அது மீண்டும் ஏற்படும் சாத்தியம் - உலக சுகாதார ஸ்தா...
நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் பாதிப்பு - அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவதால் டொலர்...
வெற்றிடமாக உள்ள 4 ஆயிரம் கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை - இராஜாங்க...
|
|