மார்சுக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் இலக்கை அடைய நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
Wednesday, February 8th, 2023எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் இலக்கை அடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், தேவையான சீருடைகளில் 70 வீதத்தை வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை சீருடைகளின் முதல் தொகுதி சீன அரசாங்கத்தால் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.
மீதமுள்ள 30 வீத சீருடைகள், உள்ளூர் தனியார் வணிகர்களால் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விரைவில் கிராம உத்தியோத்தர் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் வஜிர அபேவர்த்தன!
தேசிய மருத்துவ நிறுவன மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
மின்சார நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது - துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதும் சிறந்த...
|
|