மாத இறுதிக்குள் 12,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்!
Wednesday, July 24th, 201912,000 பட்டதாரிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் அரசாங்க வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துளார்.
அந்தவகையில் 2013 மற்றும் 2018 க்கு இடையில் பட்டம் பெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த அரச வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசியல் தலையீடுகள் இன்றி 12,000 பட்டதாரிகளுக்கு இந்த வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறிய அவர் இதில் வெளிநாட்டு பட்டதாரிகளும் அடங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொதுநலவாய நாடுகள் வழங்கிய ஒத்துழைப்புக்கு இலங்கை பாராட்டு!
தனியார் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கும் வாய்ப்பு - பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவிப்பு!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம...
|
|