சிறிய தேர்தலினை நடாத்தவும் மும்மொழிகளில் வர்த்தமானி அறிவித்தல் அவசியம்-  தலைவர் மஹிந்த தேசப்பிரிய!

Thursday, April 6th, 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து ஆராய எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் மும்மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தற்போது தனக்கு சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளிலேயே குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எவ்வாறாயினும், இதன் தமிழ் பிரதி இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அதனை அச்சிடும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் அரச அச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts: