மாதகலில் மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பப் பெண்!

Thursday, February 1st, 2018

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த றிலையில் குடும்பப் பெண்ணின் சடலமொன்று நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது

மாதகல் சேந்தான்களம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் உதயராஜ் டிலக்சி (வயது 22) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

நேற்றைய தினம் குறித்த பெண்னின் கணவர் மற்றும் பெற்றோர் ஆகியோர் கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய போதே குறித்த பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக அறையொன்றில் காணப்பட்டார். இதன் போது வீட்டில் இருந்த பொருட்கள் புரட்டி போடப்பட்டும் காணப்பட்டதாகவும் வீட்டில் இருந்த குறிப்பிட்ட தொகையான பணம் களவாடப்பட்டுள்ளதாகவும் இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு கொள்ளையிட சென்றவர்கள் குறித்த பெண்ணை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் இது தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சடலமானது பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளார்

Related posts: