மாகாண சபை தேசிய எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் சர்வகட்சி மாநாடு!
Monday, February 12th, 2018
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் மாகாண சபை தேசிய எல்லை நிர்ணய குழு தயாரித்த அறிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சர்வகட்சி மகாநாடுநடத்தப்படவுள்ளது என மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இதில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகள் மற்றும் சிறிய அரசியல் கட்சிகளை பங்கு கொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் நோக்கம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிவதேஎன்று அமைச்சர் தெரிவித்துள்ளார்
எதிர்வரும் புதன்கிழமை தேசிய எல்லை நிர்ணய குழுவின் ஆரம்ப பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் இதில் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர்மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
Related posts:
குடாநாட்டில் 60 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு ஆட்பட்டுள்ளனர்!
அரியாலையில் இடி வீழ்ந்தது; தென்னை மரங்கள் பற்றி எரிவு!
நாளைமுதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள...
|
|