மாகாணங்களுக்கென தனியான பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் நியமனம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!
Sunday, May 9th, 2021நாட்டில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்காக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் வேகம் நாட்டை அச்சசுறுத்தும் நிலையில் அனைத்து மாகாணங்களும் சென்று கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தேவையான வசதிகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் நாடளாவிய ரீதியில் 105 கொவிட் தடுப்பு நிலையங்களில் 19 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிபர் நியமனங்களுக்கான நேர்முகப் பரீட்சை 17ஆம் திகதி நிறைவு!
மட்டக்களப்பில் 24 மணித்தியாலயத்தில் 4 மரணங்கள் 64 பேருக்கு கொரோனா - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்ப...
ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 6 ஆம் திகதி ஏலத...
|
|