மாகாணங்களுக்கென தனியான பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் நியமனம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!
Sunday, May 9th, 2021
நாட்டில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்காக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் வேகம் நாட்டை அச்சசுறுத்தும் நிலையில் அனைத்து மாகாணங்களும் சென்று கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தேவையான வசதிகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் நாடளாவிய ரீதியில் 105 கொவிட் தடுப்பு நிலையங்களில் 19 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீர்க் கட்டணங்கள் அதிகரிப்பு!
வடக்கு மாகாணசபையின் ஆழுமையற்ற செயற்பாடுகளே தமிழ் மாணவா்களது கல்வி வீழ்ச்சிக்கு காரணம் - ஈ.பி.டி.பிய...
50 பில்லியன் நட்டத்தில் அரச நிறுவனங்கள்!
|
|
|


