மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் இன்றுமுதல் ஆரம்பம் !
Wednesday, July 14th, 2021நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்ட நிலையில், அத்தியாவசிய தேவைகள் மற்றும் சேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் இன்று மீளவும் ஆரம்பமாகியுள்ளன.
இதனடிப்படையில் 14 தூரப் பயண தொடருந்துகள் மாகாணங்கள் கடந்த சேவைக்காக இயங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே இந்த தொடருந்து சேவைகளைப் பயன்படுத்த முடியும்.
அதேவேளை, மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளுக்காக 500 பேருந்துகள் இன்றுமுதல் சேவையை முன்னெடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
அதேபோன்று தனியார் பேருந்துகளும் இன்றுமுதல் மாகாணங்களுக்கு இடையிலான சேவையை ஆரம்பித்துள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வறட்சியால் 17 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
இந்தியா அளித்துவரும் உதவிகள் அனைத்துக்கும் நன்றி கூறிய பிரதமர் !
அதிக விலைக்கு விற்பனை - வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!
|
|
இலங்கையின் கல்வி அபிவிருத்திக்கு அமெரிக்க முழுமையான ஒத்துழைப்பு - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்....
அமைச்சர் டக்ளஸின் பணிப்புரை - அக்கராயன் பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு உழவு இயந்திரம் வழங்கிவைப்பு...
இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 26 சதவீதமாக அதிகரிப்பு - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!