மற்றுமொரு நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் பகிரங்கப்படுத்தப்படும் – இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அறிவிப்பு!
Sunday, July 2nd, 2023ஊனமுற்றோர், முதியோர் மற்றும் நோய்வாய்ப்பட்டோருக்கான நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் பகிரங்கப்படுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும பெயர் பட்டியல் தொடர்பில் இதுவரை மேன்முறையீடுகள் அல்லது முறைப்பாடுகள் எதுவும் செய்யவில்லையென்றால் அதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மேன்முறையீடுகள் தொடர்பில் திருப்தியடையாத பட்சத்தில் அதன் பிரதியொன்றை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏனைய கட்சிகளின் தேவைகளுக்காக மக்கள் போராட்டங்களுக்கு முன்வர வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மீண்டும் தாக்குதல் நடைபெறலாம் - பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை!
எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களின் ஆலோசனைகளை வழங்கலாம் - ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிப...
கடவுச் சீட்டை வீட்டிலிருந்தவாறே பெற்றுக்கொள்ள முடியும் - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரி...
|
|