மர்ம காய்ச்சலுக்கான காரணம் கண்டுபிடிப்பு!
Monday, May 21st, 2018தெற்கில் தற்போது பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கான காரணத்தை கண்டறிய சுகாதார ஆராய்ச்சியாளர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்றைய தினம் இந்தகாய்ச்சலுக்கான காரணத்தை கண்டு பிடித்துள்ளனர்.
இன்புளுவென்ஸா மற்றும் அடினோ உட்பட இன்னும் பல வைரஸ் மூலமே இந்த காய்ச்சல் தொற்றி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த காய்ச்சல் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 600 க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பிள்ளைகளின் உடலை ஆராய்ச்சிகளுக்காக சுகாதார ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜயம்பதிசேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே கராபிட்டிய வைத்தியசாலையில் மட்டும் 37 பிள்ளைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் 27 பிள்ளைகள் 02 வயதுக்கும் குறைவானவர்கள் என தெரியவந்துள்ளது.இவர்களுக்கு தொற்றியுள்ள காய்ச்சல் இன்புளுவென்ஸா உட்பட இன்னும் பல வைரஸ் தொற்று காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|