யாழ், கிளிநொச்சி, வவுனியாவின் சில பகுதிகளில் இன்று மின்தடை !

Wednesday, September 13th, 2017

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியாவின் சில  பகுதிகளில் இன்று  புதன்கிழமை(13) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம், இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்ப்பாணத்தின் உடுத்துறை, மருதங்கேணி, வத்திராயன்,  கொடுக்குளாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில், வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு இராணுவ முகாம் ஆகிய பகுதிகளிலும்,
காலை- 09 மணி முதல் மாலை-05 மணி வரை கிளிநொச்சியின் பல்லவராயன் கட்டு ஒரு பகுதி, நாகபடுவான்,  சோலை, ஜெயபுரம் ஆகிய பகுதிகளிலும்,
காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியாவின் தவசிக்குளம் கிராமம், அட்டம்பஸ்கட கிராமம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: