யாழ், கிளிநொச்சி, வவுனியாவின் சில பகுதிகளில் இன்று மின்தடை !
Wednesday, September 13th, 2017மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியாவின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை(13) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம், இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்ப்பாணத்தின் உடுத்துறை, மரு தங்கேணி, வத்திராயன், கொடுக்குளாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில், வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு இராணுவ முகாம் ஆகிய பகுதிகளிலும்,
காலை- 09 மணி முதல் மாலை-05 மணி வரை கிளிநொச்சியின் பல்லவராயன் கட்டு ஒரு பகுதி, நாகபடுவான், சோலை, ஜெயபுரம் ஆகிய பகுதிகளிலும்,
காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியாவின் தவசிக்குளம் கிராமம், அட்டம்பஸ்கட கிராமம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
விடைத்தாள் திருத்த கட்டணத்தில் மாற்றமில்லை - பரீட்சைகள் திணைக்களம்!
பாடசாலையில் பெண்களின் பைகளை ஆண்கள் பரிசோதிப்பதை தவிர்க்க வேண்டும் - தமிழர் ஆசிரியர் சங்கம்!
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தை தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை !
|
|