மரத்தூளைப் பயன்படுத்தி மரப்பலகை தயாரிக்க திட்டம் – நிதி இராஜாங்க அமைச்சர்!
Wednesday, April 7th, 2021
மரத்தூளைப் பயன்படுத்தி மரப்பலகைகள் தயாரிக்கும் முறை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
2015 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை மரப்பலகை இறக்குமதி செய்வதற்காக ரூபா 41,576 மில்லியன் செலவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் 59 நாடுகளிலிருந்து இலங்கைக்கு மரப் பலகைகளை இறக்குமதி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் செலவுகளை கட்டப்படுத்தி உள்ளூரில் இத்தொழில் துறையை ஊக்குவிக்கும் முகமாக இலங்கையில் மரத்தூளைப் பயன்படுத்தி மரப்பலகைகள் தயாரிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளை மூட அரசு அவசர ஆலோசனை!
நேர்முகத் தேர்வினூடாக அதிபர் சேவைக்கு தகுதியானவர்களை இணைக்க அமைச்சரவை அனுமதி!
கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறியதில் இந்தியாவுக்கு எந்த பங்கும் கிடையாது - இந்திய வெளியுறவு பேச்சாளர் அரிந...
|
|
|


