மரக்கன்று நடும் நிகழ்வு: பிரதமரினால் சுற்றாடல் அமைச்சருக்கு வெண்சந்தனக் கன்று வழங்கி வைப்பு!
Thursday, April 15th, 2021மரக்கன்று நடும் சுபநேரமான நாளையதினத்தில் (16) நடுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களுக்கு வெண்சந்தனக் கன்றொன்று வழங்கிவைக்கும் நிகழ்வு கால்டன் இல்லத்தில் இன்று நடைபெற்றது.
தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வின் மரக்கன்று நடும் புண்ணிய நிகழ்வு நாளை (16) காலை 6.40 மணிக்கு கிழக்கு நோக்கி இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதான நிகழ்வு அகுணுகொல பெலஸ்ஸவில் அமைந்துள்ள சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
இதற்கமைவாக மரக்கன்று நடும் நிகழ்வு நாடளாவிய ரீதியிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தன்னது.
Related posts:
கொரோனாவால் இறப்பவர்களின் உடல்கள் அனைத்தும் தகனம் செய்யப்படும் - சுகாதார அமைச்சு உறுதி!
அரச வெசாக் தின நிகழ்வு இரத்து!
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு – நுகர்வோர் கவலை!
|
|