மன்னார் கடற்பரப்பில் 323 கிலோ கிராம் புகையிலை மீட்பு!

Saturday, March 9th, 2019

மன்னார் – பேசாலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கைவிடப்பட்ட நிலையில் இருந்த 323.4 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புகையிலை 10 பொதியாக மீட்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் இருந்து கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த புகையிலை பொதி மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts: