மனித சங்கிலி போராட்ட தோல்வியால் தமிழ் கட்சிகள் இணைந்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுகிறார்கள் – மக்களைக் கேடயமாக பயன்படுத்தும் போராட்டங்கள் தமிழ் கட்சிகள் நிறுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் வலியுறுத்து!

Monday, October 9th, 2023

மனித சங்கிலி போராட்டம் தோல்வியுற்றதும் தமிழ் கட்சிகள் இணைந்து ஹர்த்தாலுக்கு  அழைப்பு விடுகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ள சமூக செயற்பாட்டாளர் மைக்கல் மக்களைக் கேடயமாக பயன்படுத்தும் போராட்டங்களை தமிழ் கட்சிகள் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்..

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

தற்போதைய சூழ்நிலையில் குறிப்பிட்ட பல தமிழ் கட்சிகளும் இணைந்து ஒரு கர்த்தால் போராட்டத்தினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளன.

இதேநேரம் கடந்தவாரம் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து நடாத்திய மனித சங்கிலி போராட்டத்தை பார்த்தால், அந்த போராட்டம் யாழ்ப்பாணத்தை வந்தடைவதற்கு கூட ஆட்கள் இல்லை.

சாதாரணமாக பார்த்தால் பிரதேச சபை, மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் செயற்படுபவர்கள், தமிழ் கட்சிகளின்  வேட்பாளர்கள் கூட  அந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அவ்வாறானவர்கள் பங்குபற்றியிருந்தால் கூட 2000 பேருக்கு மேல் போராட்டத்திற்கு பங்காற்றி இருப்பார்கள். இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்து எமது பிரதேசத்தில் செயல்படுத்தி பிரயோசனமில்லை.

மனித சங்கிலி போராட்டமானது வெற்றியளிக்கவில்லை என்பதை உணர்ந்து தற்போது பொதுமக்களை ஏவி விடுகின்றார்கள். இந்த ஹர்த்தாலை  நடத்தி என்னதான் காணப் போகின்றார்கள்.

குறிப்பாக கிராம பகுதிகளில் உள்ளவர்கள் அன்றாட வேலை மூலம்  தமது வாழ்வாதாரத்தை செயற்படுத்துவோர் இந்த ஹர்த்தாலினால் பாதிக்கப்படுவார்கள்.

ஏன் இந்த அரசியல்வாதிகள், நாடாளுமன்றத்தில் அல்லது ஒரு சத்தியாகிரக போராட்டத்தில் குதிக்கக்கூடாது. ஏன் மக்களை ஏவி விடுகின்றார்கள்.  எதிர்வரும் நாட்களில் இவ்வாறான மக்களைக் கேடயமாக பயன்படுத்தும் போராட்டங்கள் தமிழ் கட்சிகள் நிறுத்த வேண்டும்.

குறிப்பாக அந்த காலத்தில் அமிர்தலிங்கம் போன்றவர்கள் சத்தியாகிரக போராட்டத்தினை செய்தார்கள். இந்த ஹர்த்தாலுக்கு பதிலாக முற்றவெளி மைதானத்தில் ஒரு சத்தியாகிரக போராட்டத்தினை முன்னெடுக்கலாம்.

ஆனால் அரசியல்வாதிகள் மக்களை பயன்படுத்தி மக்களை நசுக்கும் முகமாக செயற்படுகின்றார்கள். இதை  ஏற்க முடியாது.

அதேபோல மக்கள் தாமாக முன்வந்து தான் இந்த போராட்டத்தில் ஈடுபட வேண்டுமே தவிர, அரசியல் கட்சிகள் இவ்வாறு ஹர்த்தால் போராட்டம் என  அழைப்பு விடக்கூடாது.

எனவே தமிழ் கட்சிகள் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இனியும் பொதுமக்களை ஏமாற்றக் கூடாது. என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

பொலிஸாருக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டு விசாரணை பெப்ரவரியில் - யாழ்.மேல் நீதிமன்றம் நேற்று அற...
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மே முதல் வாரத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் - நீதி அமைச்சர் அறிவிப்...
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது விசேட வர்த்தமானி !