நாடாளுமன்றம் வருகின்றது கோப் அறிக்கை!
Thursday, October 27th, 2016மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் கோப் குழு உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கோப் குழுவின் உறுப்பினரான பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்த போதிலும், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக அது முடியாமல் போனதால் இந்த வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறியிருந்தார்.
Related posts:
ஜனாதிபதி தலைமையில் சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் !
ஐ.நா.வின் மேலும் 2 விசேட நிபுணர்கள் இலங்கை வருகை!
நாளைமுதல் மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவை - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் ...
|
|