மனத்துள் இருக்கும் தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கட்டும் – தீபாவளி வாழ்த்துச் செய்தியில் இலங்கையின்அரச தலைவர்கள் வலியுறுத்து!

Sunday, November 12th, 2023

உலகெங்கும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் தீபாவளி பண்டிகையில் எமது மனத்துள்ளே இருக்கும் தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விஷ்ணு பகவானினால் நரகாசுரன் தோற்கடிக்கப்பட்டதை நினைவுகூறும் வகையில் இந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதோடு, தனக்கு ஞான ஒளி கிட்டியது போல உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒளிகிட்ட வேண்டுமென நரகாசுரன் விஷ்ணு பகவானிடத்தில் வேண்டியதாக கூறப்படுகிறது.

அதனை நினைவுகூறும் வகையில், அனைவரது மனங்களிலும் ஒளி பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடனேயே இந்து பக்தர்கள் விளக்கேற்றி சமய வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

நாடு என்ற வகையில் நாம் கடந்த இரு வருடங்களில் எதிர்கொண்டிருந்த இருளான யுகத்திலிருந்து மீண்டு, ஒளி நிறைந்த பாதையில் இலங்கை தனது பயணத்தை ஆரம்பித்துள்ள இந்தத் தருணத்தில் நாட்டிற்காகவும் சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டும் எனவும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்

ஆன்மீக இருளுக்கு எதிராக ஞான ஒளியையும், தீமைக்கு எதிராக நன்மையையும் அறியாமைக்கு எதிராக அறிவையும் வெற்றிகொள்வதை குறிக்கும் தீபாவளியை அர்த்தப்படுத்தும் வகையில், அனைவருக்கும் அமைதி மற்றும் சுபீட்சத்திற்கான பிரார்த்தனையுடன் பொது ஆன்மீக வெற்றிகளுக்காக இந்த நன்னாளில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உறுதிபூணுவோம் என பிரதமர் தினேஸ் குணவர்தன தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: