மந்திகை ஆதார வைத்தியசாலையின் அதிநவீன் நோயாளர் காவுவண்டி விபத்து!
Sunday, September 6th, 2020மந்திகை ஆதார வைத்தியசாலையின் அதநவீனரக நோயாளர் காவு வண்டி குஞ்சர் கடை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டியே இன்று அதிகாலை1.30 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை ஆதார வைத்தியசாலை நோக்கி இருவருடன் பயணித்த குறித்த வண்டி, யாழ் – பருத்தித்துறை பிரதான வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியருகில் இருந்த கடை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடந்த வருடம் சுகாதார அமைச்சினால் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட நவீனரக(BMW)அம்புலன்ஸ் வண்டியே விபத்தில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை வைத்தியருக்கு பிரித்தானியாவில் உயர்விருது!
அமல் பெரேரா உட்பட 06 பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்!
கம்போடியா பயணத்தை இரத்துச் செய்தார் ஜனாதிபதி!
|
|